ADDED : செப் 29, 2009 02:09 PM

<P>*அரை மனதுடன் செய்யப்படும் சேவை உயர்ந்த சேவையாகாது. தொண்டாற்றும் போது உங்கள் முழு இதயத்தையும், மனதையும் ஆத்மாவையும் அர்ப்பணம் செய்யுங்கள்.<BR>* உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்விதமுன்னேற்றமும் பெற முடியாது. மனதைக் கடவுளிடமும், உங்கள் கைகளை வேலையிடமும் தந்தால் ஆன்மிக வாழ்வில் சாதிக்கலாம். <BR>* வெட்டிப் பேச்சினால் பயன் கிடையாது. மக்களுக்குத் தொண்டு செய்வதில் தனித்திறமையும், பற்றும் கொண்டு விளங்குங்கள். உங்கள் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் சேவை எண்ணம் மிளிரட்டும். <BR>* ஒழுக்கத்தை என்னும் உறுதியான அடிப்படையை கொண்டு தெய்வீக வாழ்க்கை வாழுங்கள். விரைவில் வாழ்வின் லட்சியத்தை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும். <BR>* வெறும் ஜபமாலையை உருட்டுவதோ, பிராணாயாமம் பண்ணுவதோ, பூஜை செய்வது மட்டுமே ஆன்மிகம் ஆகாது. இன்னல்களும் தடைகளும் நம் லட்சியத்தின் குறுக்கே வந்தாலும் அஞ்சாத நெஞ்சும், விடாமுயற்சியும், பொறுமையுணர்வும் கொண்டு வெற்றி பெறுவதில் தான் ஆன்மிகத்தின் வெற்றி இருக்கிறது. <BR>* ஆண்டவன் எங்கோ இருப்பதாக எண்ணாதீர்கள். உங்கள் இதயக்குகையில் அவனை நிலைநிறுத்துங்கள். வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வழிபாடு செய்யுங்கள். அவனை நாடி வேறு இடம் செல்ல வேண்டாம். <BR><STRONG>-சிவானந்தர்</STRONG></P>