
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மன உறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காக்கும்.
* பிறர் உங்களை துன்புறுத்தினால் கூட பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்.
* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி.
* பேச்சு, செயலில் துாய்மையைக் கடைபிடி. உன் மனம் பரிசுத்தமாக இருக்கட்டும்.
* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும்.
- சிவானந்தர்