ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் - தீபிகா படுகோனே இணையும் படம்!
ADDED : 1614 days ago
ராதே ஷ்யாம் படத்தை அடுத்து சலார், ஆதிபுருஷ் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்தபடியாக மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க, அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு அமிதாப்பச்சன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நாளை டிசம்பர் 5-ந்தேதி முதல் ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்குகிறது. இதில், பிரபாஸ் - தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்து கொள்கிறார்கள். தற்காலிகமாக புராஜக்ட் கே என்று பெயர் வைத்துள்ள இப்படம் சயின்ஸ் திரில்லர் கதையில் உருவாகிறது.