ரவீந்திரநாத் தாகூர் கதையில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்
ADDED : 1399 days ago
ரவீந்திரநாத் தாகூரின் ‛3 உமன்' என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. இதில் 3 விதமான பெண்களின் வாழ்க்கையை அவர் எழுதியுள்ளார். தற்போது இந்த நாவல் திரைப்படமாகிறது. இதனை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்தியா, அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது.
இதுபற்றி இஷிதா கங்குலி கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் இந்த படம் பற்றி ஐஸ்வர்யாவிடம் பேசினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இதில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவரைத் தவிர மேலும் இரண்டு ஹீரோயின் கேரக்டர்கள் உள்ளன. அதில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.