உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / த்ரில்லர் படத்தில் ஷ்ரத்தா

த்ரில்லர் படத்தில் ஷ்ரத்தா

மாறா, சக்கரா படங்களுக்கு பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் கலியுகம். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் தயாரிக்கிறார். ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ப்ரமோத் சுந்தர் கூறியதாவது : போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம். திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !