உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வதந்தி பரப்பாதீர்கள், திருமணத்தை துணிச்சலாக அறிவிப்பேன்: ரகுல் ப்ரீத்தி சிங் கோபம்

வதந்தி பரப்பாதீர்கள், திருமணத்தை துணிச்சலாக அறிவிப்பேன்: ரகுல் ப்ரீத்தி சிங் கோபம்

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தன் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்ய இருக்கிறார் என்றும், ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் தகவல் பரவியது. இதனை கடுமையாக மறுத்துள்ள ரகுல் கோபத்துடன் கூறியிருப்பதாவது:

இதுபோன்ற முட்டாளத்தனமான வதந்திகளை நான் பெரிது படுத்துவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு வேலை செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து என்னை தொந்ததரவு செய்யாதீர்கள். நான் இப்போது 10 படங்களில் நடிக்கிறேன் என் முழு கவனமும் என் தொழில் மீது இருக்கிறது.

நான் வெளிப்படைத் தன்மையானவள். ஜாக்கி பாக்னியுடனான என் காதலை பகிரங்கமாக அறிவித்ததை போன்று எனது திருமணத்தையும் அறிவிப்பேன். அந்த துணிச்சல் எனக்கு இருக்கிறது. எதையும், யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. தயவு செய்து எனது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !