கிராமி விருது விழா தள்ளி வைப்பு
சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாவுக்கு ஆஸ்கர் விருது போன்று இசைத் துறைக்கு இந்த விருது கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா வருகிற 31ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் பாதிப்பு உள்ள சூழ்நிலையில் கிராமி விருது விழாவை தள்ளி வைக்க முடிவு செய்துள்னர்.
உலகச் சிறந்த இசை கலைஞர்கள் கூடும் இந்த விழா அசாதாரண சூழ்நிலை கருதியும், இசை கலைஞர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதியும் தள்ளி வைக்கப்படுகிறது. வருகிற மார்ச் 14ம் தேதி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உறுதி செய்யப்படும் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர்.