ஜூலையில் துவங்கும் தனுஷ் - அருண் மாதேஸ்வரன் புதிய படம்
ADDED : 1293 days ago
நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1950-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகின்ற ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது .