உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்கிரீனில் வர்றவன்தான் ஹீரோவா?, கதை திரைக்கதை எழுதுறவன் சும்மாவா? : கே.பாக்யராஜ் கோபம்

ஸ்கிரீனில் வர்றவன்தான் ஹீரோவா?, கதை திரைக்கதை எழுதுறவன் சும்மாவா? : கே.பாக்யராஜ் கோபம்

பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், 21 வருடங்களுக்கு பிறகு கே.பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் '3.6.9'. கின்னஸ் சாதனைக்காக இந்த படம், 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் அறிமுக விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது: நான் ஹீரோவாக நடித்து 21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா. கதை திரைக்கதை எழுதுறவன் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன், நான் எப்போதும் ஹீரோ தான்.

நான் இதுவரை கிறிஸ்தவன் கெட்டப் போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள். இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தார்கள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !