உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் விக்ரம்

விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் விக்ரம்

பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் மைதானம் என்ற தனது 61வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் குறித்து ஒரு பேட்டியில் பா.ரஞ்சித் கூறுகையில், விஜய்க்காக ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்டை எழுதி வந்தேன். அந்த ஸ்கிரிப்டை பேர்ட்மேன் பட பாணியில் இயக்க திட்டமிட்டிருந்தேன். அப்படி விஜய்க்காக உருவாக்கிய அந்த கதையை தான் இப்போது விக்ரமை வைத்து இயக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் விக்ரம் நடிக்கும் மைதானம் படத்தை இயக்கிய பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ்க்காக கமல்ஹாசனை வைத்து பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக இன்னொரு தகவலும் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !