உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'யசோதா' படப்பிடிப்பு நிறைவு

'யசோதா' படப்பிடிப்பு நிறைவு

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரிக்கும் படம் யசோதா. ஹரி-ஹரிஷ் இணைந்து இயக்குகிறார்கள். இப்படத்தில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர் நடிக்கின்றனர். மணி ஷர்மா இசையமைக்கிறார் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்குகிறது. மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த பான்-இந்தியப் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத்தை அனைத்து மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறோம். சமந்தா இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் அதிலும் , குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில், முழு அர்ப்பணிப்பையும் தந்து அசத்தியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !