1960ல் நடக்கும் கதை தான் வாடிவாசல்: வெற்றிமாறன்
ADDED : 1309 days ago
இயக்குனர் வெற்றிமாறன், லாக்கப் நாவலை ‛விசாரணை' என்ற பெயரிலும், பூமணி எழுதிய வெக்கை நாவலை ‛அசுரன்' என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்துள்ளார். தற்போது விடுதலை படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‛வாடிவாசல்' நாவலை அதே பெயரில் இயக்க உள்ளார். இப்படத்தை தாணு தயாரிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இக்கதையில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்திய ‛பேட்டைக்காளி' வெப் தொடரை தயாரித்துள்ள வெற்றிமாறன், வாடிவாசல் படத்தையும் அதே போன்ற கதையை தான் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த வெற்றிமாறன், ‛பேட்டைக்காளி இன்னைக்கு நடக்குற விஷயம். வாடிவாசல் படம் 1960-ம் ஆண்டு நடக்கும் கதை' எனத் தெரிவித்துள்ளார்.