உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மகாபாரதம்' - ஆமீர்கான் உடன் பேச்சுவார்த்தையா?

'மகாபாரதம்' - ஆமீர்கான் உடன் பேச்சுவார்த்தையா?

பிரபல தெலுங்கு படத் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ், இதிகாசமான 'மகாபாரதம்' காவியத்தை ஓடிடி தளத்திற்காக உருவாக்க உள்ளதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவித்தது. ஆனால், அதன் பிறகு அது பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் அதிகமாக வரவில்லை.

இதனிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமீர்கான் ஹைதராபாத்திற்குச் சென்று கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம்தான் இந்த நிறுவனம். ஆமிர்கானை ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து அல்லு அர்ஜுன் வீடு இருக்கும் ஜுபிலி ஹில்ஸ் பகுதிக்கு அல்லு அர்ஜுனின் கார் மூலம்தான் அழைத்து வந்துள்ளார்கள்.

ஆமீர்கான் கடைசியாக நடித்து வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் படுதோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'மகாபாரதம்' ஓடிடிக்கென பிரத்யேகமாக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !