உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போர் வீரன் கேரக்டர் : பயிற்சிக்காக லண்டன் செல்கிறார் சிம்பு

போர் வீரன் கேரக்டர் : பயிற்சிக்காக லண்டன் செல்கிறார் சிம்பு

துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. அந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவரை பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு தேசிங்கு பெரியசாமியிடம் கூறியிருந்தார். இதன் காரணமாக அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை அவர் தான் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் ரஜினிக்கு ரெடி பண்ணிய அதே கதையை சிம்புவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் போர் வீரன் வேடத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக லண்டன் செல்லப் போகிறார். ஒரு மாதம் அங்கு தங்கி பயிற்சி பெற்று விட்டு அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !