உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம்

ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம்

“எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம்” ஆகிய தமிழ்ப் படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகரான சர்வானந்த். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தெலுங்கு முறைப்படி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. திருமணத்தில் சர்வானந்த்தின் சிறு வயது நண்பரும், நடிகருமான ராம் சரண் மற்றும் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டவர்களும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

மணப்பெண் ரக்ஷிதா ரெட்டி ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சரான பொஜ்ஜல கோபால கிருஷ்ண ரெட்டி என்பவரின் பேத்தி தான் ரக்ஷிதா. இவரது அப்பா மதுசூதன் ரெட்டி உயர்நீதிமன்ற வக்கீலாக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற ஹால்டி, சங்கீத் நிகழ்வுகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது திருமணப் புகைப்படங்களும் வெளிவந்துள்ளது. ஜுன் 9ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !