உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுஜிதாவின் முடிவால் பதறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு! என்ன செய்தார்கள் தெரியுமா?

சுஜிதாவின் முடிவால் பதறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு! என்ன செய்தார்கள் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பெரும்பாலான நடிகர்கள் இப்போது மாறிவிட்டனர். ஆனால், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், இதுவரை சீரியலை விட்டு விலகவில்லை. அவர் தான் சீரியலுக்கு ஒரு முக்கிய ப்ளாஸாக உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைத்ததன் காரணமாக சீரியலை விட்டு விலகுவதாக அண்மையில் முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தயாரிப்பு தரப்பினர், சுஜிதா விலகினால் சீரியல் நன்றாகவே இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, அவர்கள் சுஜிதாவிடம் சமாதானம் பேசி இதுவரை பேசப்பட்ட சம்பளத்தை விடவும் அதிக தொகையை சம்பளமாக தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவை சுஜிதா கைவிட்டுவிட்டதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !