ரஜினி 170வது படத்தில் ‛பாகுபலி' ராணா
ADDED : 734 days ago
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தமிழ் ரசிகர்களுக்கு பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். அதன்படி, த.சே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் என அறிவித்தனர். இப்போது வருகின்ற நாட்களில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களை அறிமுகபடுத்தி வருகின்றனர். நேற்று துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்று நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் இணைந்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.