உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதிபதியை மிரட்டிய நடிகர் உட்பட இருவர் கைது

நீதிபதியை மிரட்டிய நடிகர் உட்பட இருவர் கைது

கிண்டி, வேளச்சேரியைச் சேர்ந்தவர் திருமால், 54; ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 7வது நீதிமன்ற நீதிபதி. இம்மாதம் 18ல் 'பீனிக்ஸ் மால்' அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

பூங்கா கதவு மூடுவது தொடர்பாக, அங்கிருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து சேர்ந்து, நீதிபதியை ஆபாச வார்த்தைகளில் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில், நீதிபதி திருமால் புகார் அளித்தார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் ஜெயமணி, மாரிமுத்துவை கிண்டி போலீசார், நேற்று கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !