மூன்றாவது முறையாக படம் இயக்கப் போகும் தனுஷ்!
ADDED : 701 days ago
ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் பா.பாண்டி என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார் நடிகர் தனுஷ். அந்த படத்தில் தானும் சிறு வயது ராஜ்கிரணாக ஒரு கெஸ்ட் ரோலில் அவர் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது தனது ஐம்பதாவது படத்தை தானே ஹீரோவாக நடித்து இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் பா.பாண்டி படத்தைப் போன்று ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு தனுஷ் திட்டமிட்டிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் உறவினரான வருண் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே மல்லுக்கட்டு என்ற படத்தில் நடித்தவர். தற்போது தனது கைவசம் உள்ள சேகர் கம்முலா, வெற்றிமாறன், நெல்சன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து முடித்த பிறகு இந்த படத்தை தனுஷ் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.