உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆக்ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கிய நானி படம்

ஆக்ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கிய நானி படம்

'அண்டே சுந்தரனிகி' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் விவேக் ஆத்ரேயா நடிகர் நானி கூட்டணி 'சரிபோதா சனிவாரம்' என்கிற படத்தின் மூலம் இணைந்துள்ளனர். தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நானி உடன் இணைந்து நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

கடந்த மாதத்தில் இதன் பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !