உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சத்தமின்றி துவங்கிய பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் படம்!

சத்தமின்றி துவங்கிய பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் படம்!

லவ் டூடே படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கும் இந்த படத்திற்கு எல்.ஜ.சி(லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை பூஜையுடன் தொடங்கி கடந்த சில மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆசிர்வாதத்துடன் தொடங்கியதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !