சினிமா இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட திருடர்கள்
உசிலம்பட்டி : இயக்குனர் மணிகண்டனின் தேசிய விருது, நகை, பணம் ஆகியவை கொள்ளை போன நிலையில் தேசிய விருதை மட்டும் திருப்பி தந்து மன்னிப்பு கடிதம் வைத்து சென்றுள்ளனர் திருடர்கள்.
இந்நிலையில் இன்று(பிப்., 13) மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டில் பாலித்தீன் பையில், ‛‛அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு...'' என குறிப்பிட்டு மன்னிப்பு கடிதத்துடன் இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.