உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தென் மாவட்டம்' சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த ஆர்கே சுரேஷ்

'தென் மாவட்டம்' சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த ஆர்கே சுரேஷ்

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் இயக்க உள்ள 'தென் மாவட்டம்' என்ற புதிய படத்தின் முதல் பார்வையை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில் இசை - யுவன்ஷங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இப்படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை, தான் ஒப்பந்தமாகவில்லை என யுவன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்கே சுரேஷ் உங்களது ஒப்பந்தத்தைப் பாருங்கள் எனக் கூறியிருந்தார்.

இது என்ன புது சர்ச்சை என ரசிகர்களும், திரையுலகினரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்நிலையில், “தென் மாவட்டம்' படத்தின் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும, நன்றி யுவன்,” என ஆர்கே சுரேஷ் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இரு தரப்பிலும் பேசி சுமூக முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !