உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சவுந்தர்யா 17 லட்சம் ஏமாந்தது உண்மை தான் : வைரலாகும் போலீஸ் புகார்

சவுந்தர்யா 17 லட்சம் ஏமாந்தது உண்மை தான் : வைரலாகும் போலீஸ் புகார்

பிக்பாஸ் சீசன் 8ல் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில், குறும்படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து பிரபலமான சவுந்தர்யா நஞ்சுண்டானும் கலந்து கொண்டு ஸ்கோர் செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வினை கூறி வந்தனர். அதில், சவுந்தர்யாவும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த 17 லட்ச ரூபாய் பணத்தை ஒரு பிராடு போன் காலில் இழந்ததாக கூறியிருந்தார். இதனை பலரும் பொய் என விமசித்து வந்தனர்.

இந்நிலையில் சவுந்தர்யா நஞ்சுண்டான் கடந்த செம்படம்பர் மாதம் பணம் தொலைந்ததற்காக அளித்துள்ள போலீஸ் புகாரின் புகைப்படத்தையும் அப்போது அவர் பதிவிட்ட சோஷியல் மீடியா பதிவையும் ரசிகர்கள் தேடி எடுத்து ஷேர் செய்துள்ளனர். சவுந்தர்யா பணம் தொலைந்ததாக கூறுவது பொய் இல்லை என்றும் நிரூபித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !