பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுகிறாரா ரேஷ்மா?
பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை காட்டிலும் இந்த தொடரின் மூலம் தான் அதிக புகழும் பிரபலமும் கிடைத்தது.
இந்நிலையில் அண்மையில் 'ராதிகா அன்பானவள் கெட்டவள்' என்ற கேப்ஷனுடன் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த போது எடுத்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நினைவுகளை அசைபோட்டிருக்கிறார். இதை பார்த்துவிட்டு ரேஷ்மா சீரியலை விட்டு விலகுகிறாரா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் தொடரில் ரேஷ்மாவுக்கு மெயின் லீட் ரோல் கிடைத்திருப்பதால் பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.