ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த ரத்னகுமார்
ADDED : 418 days ago
மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இது அல்லாமல் இவர் கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் ஆக மாஸ்டர், லியோ ஆகிய படங்களில் பணியாற்றியவர். இந்த நிலையில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகிறது. இப்படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் ஆக ரத்னகுமார் இணைந்துள்ளதாக இன்று அவரின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்கின்றார்.