உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு

தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று மீண்டுள்ளார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு இன்று(நவ., 29) காலமாகி உள்ளார். இது சமந்தா மற்றும் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மறைவு பற்றி சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் நாம் சந்திக்கும் வரை அப்பா... என்று உடைந்த இதய ஈமோஜியுடன் உருக்கமாக மனமுடைந்து ஒரு பதிவை போட்டுள்ளார்.

கணவர் நாகசைதன்யா உடன் பிரிவு, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என அடுத்தடுத்து துயரங்களை எதிர்கொண்டு வரும் சமந்தா இப்போது பெரும் துயரமாக தனது தந்தையை இழந்துள்ளார். இதையடுத்து சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !