உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை களத்தில் இறங்கினார் ஹாரிஸ் ஜெயராஜ் வாரிசு

இசை களத்தில் இறங்கினார் ஹாரிஸ் ஜெயராஜ் வாரிசு

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ் தந்தை வழியில் தானும் இசை அமைப்பாளராகிறார். அதற்கு முன்னோட்டமாக தற்போது 'ஐயையோ' என்ற இசை ஆல்பத்தின் மூலம் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். இந்த ஆல்பத்திற்கு இசை அமைத்து பாடி, நடித்தும் உள்ளார். இந்த ஆல்பத்தை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. 'ஐயையோ' பாடலை மோகன்ராஜ் மற்றும் சாமுவேல் நிக்கோலஸ் இணைந்து எழுத, சனா மரியம் இயக்கியுள்ளார். ஜாயித் தன்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆலிஷா அஜித் நடனம் அமைத்துள்ளார்.

இதுகுறித்து சாமுவேல் நிக்கோலஸ் கூறும்போது, ஏழாம் அறிவு' படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும், பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். 'தேவ்' திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு பாடலையும் பாடியுள்ளேன். தற்போது 'ஐயையோ' பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !