உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது!

அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது!


இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கடைசியாக. வெளிவந்த 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகத்தை அறிவித்தனர். '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த பாகத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார்.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பிராய்க்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் 2025ம் செப்டம்பர் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !