உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எம்புரான்' தயாரிப்பாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

'எம்புரான்' தயாரிப்பாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனம், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் அந்நிறுவனத்தின முதலீடுகள் அதிகம். சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'எம்புரான்' படத்தின் பங்குதாரராக கடைசி நேரத்தில் சேர்ந்தது.

'எம்புரான்' படத்தில் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும் சில காட்சிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் அக்காட்சிகளை நீக்கி மறுதணிக்கை செய்து படத்தை மீண்டும் திரையிட்டனர்.

இந்நிலையில் கோகுலம் நிறுவனத்தின் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திரையுலகத்தில் அடிக்கடி வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கம்தான். ஆனால், தற்போது அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !