மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம்
நடிகர் சந்தானம் நடித்து வருகின்ற மே 16ம் தேதி அன்று வெளியாகவுள்ள படம் 'டிடி ரிட்டர்ன்ஸ் : நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் சந்தானம் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது சந்தானமிடம் 12 வருடங்கள் கழித்து திரைக்கு வந்த மதகஜராஜா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, மதகஜராஜா வெளியாகிறது என கேள்விப்பட்டதும் சின்னதா ஒரு பயம் இருந்தது. 12 வருஷத்துக்கு முன்பு பண்ணின காமெடி இப்போது ஒர்க் அவுட் ஆகுமான்னு நினைச்சேன். ஆனால், ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அப்போது சுந்தர்.சி என்னிடம் சொன்னது இன்னமும் ஞாபகம் இருக்கு. 'சந்தானம், உங்க நேரம் ரொம்ப உச்சத்துல இருக்குது. நீங்க தொட்டது எல்லாம் துலங்குது. அதனால் 'மதகஜராஜா'விலும் உங்க போர்ஷன் பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறேன் என்றார். அந்த வார்த்தை பலித்துவிட்டது என தெரிவித்தார்.