விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா?
இவங்க மட்டும்தான் காதலிச்சாங்களா? இவங்க மட்டும்தான் சந்தோஷமாக இருக்காங்களா? இவங்க மட்டும் ஐடியல் தம்பதிகளா என்று ஊரே திட்டும், விமர்சிக்கும் அளவுக்கு அடிக்கடி போட்டோ வெளியிடுவார்கள் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர். புத்தாண்டு, காதலர் தினம், தீபாவளி, பொங்கல், ஓணம், அவர்களின் பிறந்தநாள் என ஏதாவது காரணத்தை சொல்லி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி வெளிநாடு சென்றும் போட்டோசெஷன் எடுப்பார்கள்.
யார் கண் பட்டதோ. கடந்த சில போட்டோ செஷன்களில் நயன்தாரா மட்டுமே இருக்கிறார். விக்னேஷ் சிவன் மிஸ்சிங். என்னாச்சு? பிரிவா? ஊடலா? தொழில் சிக்கலா? என்று சந்தேக கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து அவர்கள் தரப்பில் கேட்டால் '' தான் இயக்கும் எல்ஐகே பட வேலைகளில் விக்னேஷ் சிவன் பிஸி. அதனால், போட்டோசெஷனில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மற்றபடி வேறு எதுவும் இல்லை. ஒரு போட்டோவில் இரண்டுபேரும் இல்லாதது குற்றமா? திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிவிட்டது'' என்று சிரிக்கிறார்கள்.