உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம்

கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம்


சென்னையில் நேற்று நடந்த 'தி வெர்ட்டிக்ட்' பட விழாவுக்கு கையில் சின்ன பிளாஸ்திரி கட்டுடன் வந்திருந்தார் வரலட்சுமி. என்னாச்சு? பாடி பில்டரான கணவருடன் சண்டையா? என்று அதை பார்த்து சிலர் கிண்டல் செய்ய, ''ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டுவிட்டது. நான் சரியாக இருந்தேன், எதிர்தரப்பு தவறு செய்ததால் எனக்கு அடி. இப்போது தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்கிறேன்.

அதிக நாட்கள் ஐதராபாத்தில் இருக்கிறேன். படப்பிடிப்பு இல்லை என்றால் மும்பைக்கு கணவர் வீடு செல்கிறேன். தமிழ் பட வேலைகள், குடும்ப விஷயங்கள் என்றால் சென்னை என பிஸியாக இருக்கிறேன். தமிழில் விஜய்சேதுபதி மகன் நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தில் 'சண்டக்கோழி 2' பாணியில் வில்லத்தனமான ரோலில் நடிக்கிறேன். மற்றபடி நிஜ வாழ்க்கையில் எந்த சண்டையும் இல்லை. இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !