உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா?

திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா?


இசையமைப்பாளர் இளையராஜா முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படம், மே 14, 1976ல் வெளியானது. அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா. இதுவரை ஆயிரத்து 400க்கும் அதிகமான படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து விட்டார்.

ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளை பார்த்துவிட்டார். 5 தேசியவிருது, ஏகப்பட்ட மாநில, மற்ற விருதுகள், பத்ம விபூஷண் விருது வரை வாங்கிவிட்டார். 81 வயதிலும் கச்சேரிகள், சிம்போனி என பிஸியாக இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருக்கிறார். இதற்கெல்லாம் மணிமகுடமாக இந்த 50வது ஆண்டில் அவருக்கு பாரதரத்னா கிடைக்க வேண்டும், வாழும் காலத்திலேயே அவர் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.

இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக சில மாதங்களாக தகவல்கள் கசிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜாஜி, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன், காமராஜர், அப்துல்கலாம், எம்ஜிஆர், எம்.எஸ் சுப்புலட்சுமி, சி.சுப்ரமணியம் ஆகியோர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்றவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !