உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன்

24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன்

பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் அர்ஜுன் ஜோடியாக சாது படத்தில் நடித்து அறிமுகமானார். 2001ல் கமல்ஹாசனின் ‛ஆளவந்தான்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தமிழில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட்டில் அதிகம் நடித்தார். அவ்வப்போது ஓரிரு தென்னிந்திய படங்களில் நடித்தார். 2022ல் பான் இந்தியா படமாக வெளியான கன்னட படமான கேஜிஎப்., 2வில் பிரதமர் வேடத்தில் நடித்து மீண்டும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பின் ரவீனா தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். ‛ஜென்டில்வுமன்' படத்தை இயக்கிய ஜோஷுவா சேதுராமன், ‛லாயர்' என்ற படத்தை இயக்குகிறார். நீதிமன்றம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக வக்கீல் வேடத்தில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்தில் தான் ரவீனாவும் வக்கீலாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் அவரின் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுனில் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !