உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன்

பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன்


விக்ரமுக்கு ஜோடியாக ‛தங்கலான்' படத்தில் நடித்த மாளவிகா மோகனன், தற்போது கார்த்தியுடன் ‛சர்தார் -2' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‛தி ராஜா சாப்' என்ற படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ‛‛தி ராஜா சாப் படம் திகில் கலந்த நகைச்சுவை கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸின் காதலியாக நான் நடிக்கிறேன். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு பிரபாஸ் அளித்த பேட்டிகளை பார்த்துவிட்டு அவர் மிகவும் அமைதியான நபராக இருப்பார் என்றுதான் நான் கணித்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார்.

எப்பொழுதுமே கலகலப்பாக பேசுகிறார். அவருடன் இருக்கும் நேரங்களில் ரொம்ப ஜாலியாக இருந்தது. அவர் இருக்கும் இடத்தில் எப்போதுமே சிரிப்பொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு தான் மட்டுமின்றி மற்றவர்களையும் மகிழ்ச்சி படுத்துகிறார் பிரபாஸ். அவருடன் நடித்தது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்திருக்கிறது'' என்று கூறுகிறார் மாளவிகா மோகன்.

மேலும் இந்த ராஜா சாப் படம் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !