உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல்

'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, உருவாக உள்ளதாக 2022ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட படம் 'வாடிவாசல்'. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.

பலருக்கும் எழுந்த சந்தேகத்துக்கிடையில் இந்த வருடப் பொங்கல் சமயத்தில் வெற்றிமாறன், சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது,' என்ற அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு.

அதன்பின் மார்ச் மாதத்தில் வெற்றிமானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பாடல் பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

இப்போது 'வாடிவாசல்' படம் டிராப் ஆகிறது என மீண்டும் ஒரு தகவல் பரவி வருகிறது. சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவிக்கும் வரை எதுவும் உண்மையில்லை என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !