உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்?

'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்?


சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடிக்க 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, இலங்கை என விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நின்று போய் இருந்தது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய மற்றொரு படமான 'மதராஸி' படத்தை முடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் போய்விட்டார் என்றார்கள். அதற்கடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியதும் படப்பிடிப்பை மீண்டும் தாமதப்படுத்தியதாகச் சொன்னார்கள். தற்போது வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால் 'பராசக்தி' உள்ளிட்ட தன்னுடைய மற்ற பட வேலைகளை ஆகாஷ் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !