உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி

சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி

அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, சன்னி தியோல், ரவி துபே மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படம் 'நமித் மல்கோத்ராவின் 'ராமாயணா'.

இப்படத்தின் அறிமுக டீசர் நேற்று யூ டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது. டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த வீடியோ இதுவரையில் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் தமிழ் நடிகையான சாய் பல்லவி நடிக்கிறார். நேற்று வீடியோவைப் பகிர்ந்து, “சீதா மாதாவின் ஆசீர்வாதத்துடன், தெய்வீகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னோடிகளுடன் சேர்ந்து, காவியத்தை மீண்டும் உருவாக்க, அவரது பயணத்தை நான் அனுபவிக்கிறேன். இது போன்ற ஒரு நடிகர்கள் மற்றும் குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் நடிகையான சாய் பல்லவி இந்த பிரம்மாண்ட பான் இந்தியா இதிகாச திரைப்படத்தில் நடிப்பது முக்கியமான ஒன்று. வேறு எந்த ஒரு தமிழ் நடிகைக்கும் இப்படியான ஒரு ஆசீர்வாதம் கிடைத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !