உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன்

கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன்

மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதி உடன் இணைந்து 'தலைவன் தலைவி' படத்தில் நடித்துள்ளார். இதை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். குடும்ப பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் வெள்ளியன்று ரிலீஸாகிறது. தற்போது இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த படம் குறித்து பல சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி ஒரு பேட்டியில் நான் மைதா வகையான உணவுகளை தவிர்த்து வந்தேன். குறிப்பாக பரோட்டாவையெல்லாம் சாப்பிடாமல் இருந்தேன். ஆனால் மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, என்னால் என் நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய பரோட்டா சாப்பிட்டேன். அத்துடன் பரோட்டா போடவும் கற்றுக் கொண்டேன். இது படத்துக்காக மட்டுமல்ல, படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் நிறைய பரோட்டா சாப்பிட்டேன்” என பரோட்டா கதையை கலகலப்பாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !