உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது!

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது!


கடந்த 2016ம் ஆண்டில் பாஸ்டியன் என்ற உணவகத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் திறந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன் பிறகு அதே பாந்த்ராவில் ஒரு பெரிய இடத்துக்கு அது மாற்றப்பட்டு உணவு பிரியர்கள் மற்றும் பிரபலங்களுக்கான ஒரு இடமாக மாறியது.

இந்த நிலையில் தனது இணையப் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது மும்பை உணவகமான பாஸ்டியன் செப்டம்பர் 4ம் தேதியான நாளை மூடப்படுவதாக தெரிவித்திருக்கிறார். தனது நட்பு வட்டாரத்துக்கு இன்று அவர் ஒரு இரவு விருந்தும் கொடுக்கிறார். என்றாலும் எதற்காக அந்த ஓட்டல் மூடப்படுகிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

மேலும் தற்போது ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் 60 கோடி ரூபாய் கடன் மற்றும் முதலீடு முறைகேட்டில் சிக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைக்காக கூட அவர்கள் அந்த ஹோட்டலை விற்பனை செய்யலாம் என்கிற கருத்துக்களும் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !