உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ்

லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ்

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் வில்லனாக நடித்தவர் அர்ஜுன் தாஸ். அந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் நடித்த அர்ஜுன் தாஸ், பின்னர் வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் ஹீரோ ஆகிவிட்டார். அதன்பிறகு போர், ரசவாதி போன்ற படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் அஜித் நடித்த குட் பேட் அகலி படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இனிமேல் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார் அர்ஜுன் தாஸ். என்றாலும் லோகேஷ் கனகராஜ் அழைத்தால் கண்டிப்பாக மீண்டும் வில்லனாக நடிப்பேன். குறிப்பாக அவர் கதை கூட எனக்கு சொல்ல வேண்டியதில்லை. சினிமாவில் எனக்கு அடையாளத்தை கொடுத்தவர் என்பதினால் அவர் எப்படிப்பட்ட வேடத்தில் நடிக்க சொன்னலும் கண்ணை மூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் நடிப்பேன் என்கிறார் அர்ஜுன் தாஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2025-09-19 19:26:23

நீ கண்ணை மூடி நடி ராசா நாங்க கண்னை திறந்து பார்க்கற மாதிரி இருந்தா ,, மாநகரம் கைதி படம் தவிர வந்த இவர் மற்ற எல்லா படமும் ஒரே மாதிரி தான் இருந்தது மாஸ்டர் கூலி விக்ரம் னு ஒரே பேரில் படம் எடுத்து எல்லா பயல்களையும் கூத்து கட்ட விட்டு இருக்கலாம் .. எது எந்த படம் னு அவருக்கே தெரியுமா னு தெரியல...