படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பைசன்'. கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக தென் மாவட்ட கபடி வீரராக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.
அதோடு இதற்கு முன்பு 'வர்மா, மகான்' என்ற இரண்டு படங்களில் நடித்திருந்தபோதும் இந்த பைசன்தான் என்னுடைய முதல் படம் என்று கூறும் துருவ் விக்ரம், ''இந்த படத்தில் ஒரு அழுத்தமான கதைக் கருவை படமாக்கி இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ், எனக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கொடுத்த நம்பிக்கை காரணமாகவே இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். அவரது உறுதியும் தெளிவும் எனக்கு இந்த படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை ஏற்படுத்தியது'' என்று கூறுகிறார்.
மேலும், ''இந்த படத்தில் நடிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் மொத்த ஸ்கிரிப்டையும் படித்தேன். அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அப்படியே ஸ்பாட்டுக்கு சென்றேன்'' என்றார். இந்த பைசன் படம் அக்டோபர் 17ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.