உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம்

ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம்


வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான 'ஜூடோபியா' 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்காக ஆஸ்கர் விருதையும் பெற்றது.

இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு காரணங்களால் வால்ட் டிஸ்னி இரண்டாம் பாகத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் 28ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

முதல் பாகத்தில் ரசிகர்களை குறிப்பாக குழந்தைகளை ஈர்த்த காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் இந்த பகுதியிலும் தங்கள் சாகசத்தை தொடர்கிறார்கள். இருவரும் கேரி டி'ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் ஆகியோரே இதனையும் இயக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !