உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏழு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அனுஷ்கா சர்மாவின் படம்

ஏழு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் அனுஷ்கா சர்மாவின் படம்


ஹாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா சர்மா கடந்த 2017ல் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக 2018ல் ‛ஜீரோ' என்கிற படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா சர்மா. அதன்பிறகு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி ஒரு சில படங்களையும் டிவி தொடரையும் தயாரித்தார். அதன் பிறகு தனது கணவருடன் இணைந்து சில விளம்பர படங்களில் கூட நடித்தார். மீண்டும் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் விதமாக 2022ல் இவர் ‛சக்தா எக்ஸ்பிரஸ்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படத்தின் பட்ஜெட் அதிகமானது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த படம் எடுக்கப்பட்டும் திரைக்கு வராமல் முடங்கி கிடந்தது. இந்த நிலையில் இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் விதமாக தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !