உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு

கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு


நடிகரும், சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பாலியல் புகார் கூறியிருந்தார். தன்னை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டு சென்று விட்டார் என்பது அந்த குற்றச்சாட்டு. மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிசில்டாவும் ஏற்கெனவே திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாய் கிரிசில்டாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை என்னுடையது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்தால் குழந்தையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று ரங்கராஜ் கூறியுள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ''ஜாய் கிரிசில்டாவுக்கு தற்போது பிறந்துள்ள குழந்தை, ரங்கராஜூக்குத்தான் பிறந்தது என்றால் அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொள்ள ரங்கராஜ் தயாராக இருக்கிறார். ஆனால் கிரிசில்டாவின் நோக்கம் வேறு மாதிரியாக உள்ளதால் தான் இதுபோல அவதூறு பரப்பி நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறார்.

எனவே, அந்த குழந்தைக்கு மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில், யூடியூப் இஷ்டம்போல செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். கிரிசில்டா தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வருகிற 14ம்தேதிக்குள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !