உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா!

சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா!


'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சந்தியா .இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கு பின்னர் இவர் காதல் சந்தியா என அழைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் 'டிஷ்யூம், கண்ணாமூச்சி ஏனடா, வல்லவன், மகேஷ் சரண்யா மற்றும் பலர்' என சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் சில காலங்களில் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

தற்போது சந்தியா ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இன்றும் வருத்தப்படும் செய்தி குறித்து கூறியதாவது, வல்லவன் படத்திற்காக சிம்பு அணுகியபோது என் கதாபாத்திரம் குறித்து கூறியது போன்று அவர் உருவாக்கவில்லை. இதனால் அவரின் மீது இன்றும் எனக்கு வருத்தம் உள்ளது என ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !