உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி

96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி

தமிழில் 96, மெய்யழகன் ஆகிய மென்மையான படங்களை இயக்கியவர் பிரேம் குமார். இவரின் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகி பின்னர் அந்த படம் தள்ளிப்போனது. அதன்பிறகு மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நானியை சந்தித்து பிரேம் குமார் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த கதை நானிக்கு பிடித்துள்ளதால் அவர் நடித்து வரும் படங்களை முடித்தவுடன் இந்த கதையில் நடிக்கிறேன் என உறுதியளித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !