உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா?

மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா?


நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவில் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் நாக சைதன்யாவுடன் 2010ல் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு ஒரு பக்கம் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி பிறகு அது உண்மையாகி கடந்த வருடம் டிசம்பர் நான்காம் தேதி திருமணமும் செய்துகொண்டனர். இதோ இன்று தம்பதியினர் முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

அதேபோல கடந்த மூன்று வருட காலகட்டத்தில் நடிகை சமந்தாவும் பிரபல இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் நட்பாக பழகி பின்னர் அது காதலாக மாறி கிசுகிசுகளாக வெளியாகி கடந்த ஒன்றாம் தேதி அவர்கள் இருவரும் திருமணத்தில் இணைந்து தாங்கள் காதலில் இருந்ததை உறுதிப்படுத்தியும் விட்டனர். இவர்களது திருமணம் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதாவது நாக சைதன்யா மறுமணம் செய்து ஒரு வருடம் முடிவடைவதற்குள் சமந்தாவும் தனக்கான துணையை தேடி இல்லற வாழ்க்கையில் மீண்டும் நுழைந்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் அடுத்த ஒரு வருடத்திற்குள் உன்னை போல நானும் பெரிய ஆளாகி காட்டுகிறேன் என்று தங்களது எதிரிக்கு சவால் விடுவார்கள். ஒருவேளை அதுபோல தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்ட அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள் தானும் திருமண செய்து கொள்வேன் என மனதிற்குள்ளேயே சபதம் செய்து அதை மிகச் சரியாக சமந்தா நிறைவேற்றியுள்ளாரோ என்னவோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !