மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால்
ADDED : 1 days ago
மோகன்லால், நிவின்பாலி மற்றும் மோகன்லாலின் மகன் பிரணவ் மூவரும் சமீபத்தில் தனி விமானம் ஒன்றில் ஒன்றாக பயணித்தது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த புகைப்படத்தை நடிகர் நிவின்பாலி பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான பயணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவர்கள் இப்படி பயணம் மேற்கொண்டது சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்று தெரிய வந்துள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நிவின்பாலி நடித்துள்ள சர்வம் மாயா திரைப்படமும், மோகன்லால் நடித்துள்ள விருஷபா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்பதும், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.